சன் தொலைக்காட்சியில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில் மாரிமுத்து மறைவுக்கு பின் தட்டுத்தடுமாறிய நிலையில் TRPயும் குறைய தொடங்கியது.
மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் பெண்கள் சுதந்திரம் குறித்து, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அழுத்தமாக பேசப்படுகிறது.
இதனாலே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியலாக இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகிகளாக ஜொலித்து வரும் கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி மற்றும் ஹரிப்ரியா போன்றவர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் நாயகிகளாக விளங்கம் இவர்களின் சம்பளம் குறித்து தான் தற்போது பார்க்க விருக்கிறோம்.
ஒரு நாளைக்கு இவர்கள் வாங்கும் சம்பளம் ஆச்சிரியப்படும் அளவிற்கு இருக்கிறது. கதையின் முக்கிய நாயகியாக நடித்து வரும் நடிகை மதுமிதா ஒரு நாளைக்கு ரூ. 15,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதே போல் நடிகை கனிகா ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். மேலும் பிரியதர்ஷினி ரூ. 10,000 ஆயிரம் மற்றும் ஹரிப்ரியா ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…