#image_title
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்றி வரும் நிலையில் 4-ம் நாளான இன்று வரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி.
90’களில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சுந்தர் சி தொடர்ந்து 30 வருடங்களாக பல கமர்சியல் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். இவரது திரைப்படங்கள் என்றாலே வாய்விட்டு சிரித்து வரலாம் என்ற அளவிற்கு சிறப்பானதாக இருக்கும். இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்து வரும் சுந்தர் சி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார்.
இடையில் சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் கலகலப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. அதைத் தொடர்ந்து அரண்மனை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தது. இதனால் தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தையும் இயக்கியிருந்தார் சுந்தர் சி.
இந்த திரைப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க ராசி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதிலும் தமன்னாவின் நடிப்பு கிராபிக் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் ஹிப்பாப் ஆதியின் இசையும் மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்திருந்தது. படம் வெளியான நாளிலிருந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது வரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அரண்மனையை நான்கு திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் 22 கோடிக்கும் மேல் வசூல் செய்த பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
அதன்படி, முதல் நாளில் 4.65 கோடி வசூலும், இரண்டாவது நாளில் 6.65 கோடி வசூலும், மூன்றாவது நாளில் 7.85 கோடி வசூலும், நான்காவது நாளில் மூன்று கோடி வசூலும் செய்துள்ளது. மொத்தம் உலகம் முழுவதும் 22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…