“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

Spread the love

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமானார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று திரையுலகினர் கணித்த நிலையில், அண்மையில் ரவியை பிரிவதாகக் கெனிஷா வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவி, தன் மனதில் இருந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்தார். குறிப்பாக, தங்களது திருமண வாழ்க்கை முறிந்ததற்குத் தமிழ்நாட்டில் ‘இட்லி நடிகை’ என்று அழைக்கப்படும் ஒருவர்தான் காரணம் என்று அவர் குண்டைத் தூக்கிப் போட்டார். இட்லி நடிகை என்றாலே குஷ்பூவைக் குறிக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் அவரது பெயர் பலமாக அடிபடத் தொடங்கியது; குஷ்பூவும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஆர்த்திக்கு ஆதரவாகவும் ரவிக்கு எதிராகவும் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அண்மையில் அளித்த யூடியூப் பேட்டி ஒன்றில் ரவி – ஆர்த்தி பிரிவின் பின்னணி மற்றும் குஷ்பூவின் கடந்த காலக் காதல் கதைகள் குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ரவியின் முன்னாள் மாமியாருக்கும் குஷ்பூவுக்கும் ஆரம்பத்திலிருந்தே நட்பு இருந்ததால், ரவி நல்ல பையன் என்று ஆர்த்தியிடம் குஷ்பூதான் கோர்த்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நட்பின் அடிப்படையில் சேர்த்து வைத்ததோடு ஒதுங்காமல், தற்போது ரவியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று ஆர்த்திக்கு ஐடியா கொடுத்து, மறுபக்கம் ரவியைத் திண்டாட வைப்பதே குஷ்பூதான் என்றும் சபிதா ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் குஷ்பூவின் பழைய வாழ்க்கையைப் பற்றிப் பேசிய சபிதா ஜோசப், குஷ்பூவுக்கும் நடிகர் பிரபுவுக்கும் இடையே காதல் மலர நடன இயக்குனர் கலா மாஸ்டர்தான் மீடியேட்டராக (தூதுவராக) செயல்பட்டார் என்ற பழைய ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார். ஏற்கனவே திருமணமான பிரபுவை குஷ்பூ திருமணம் செய்து கொண்டதாகவும், கலா மாஸ்டர் வீட்டில் இந்தத் திருமணம் நடந்ததாக அப்போதே நாளிதழ்களில் செய்தி வந்ததாகவும் அவர் கூறினார். இந்தத் திருமணத்தைக் கேள்விப்பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துப்பாக்கியோடு வந்ததாகவும், பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இப்பிரச்சனையைத் தீர்த்து வைத்ததாகவும் திரையுலகில் பேசப்பட்ட தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். ‘முறைமாமன்’ படத்தின் போதுதான் இப்பிரச்சனை வெளியில் வந்ததாகவும், அதன் பிறகுதான் குஷ்பூவிற்கும் சுந்தர்.சி-க்கும் இடையே காதல் உருவாகித் திருமணத்தில் முடிந்ததாகவும் சபிதா ஜோசப் அந்தப் பேட்டியில் விவரித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

2 minutes ago

BREAKING: கட்டணம் ரத்து.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…

7 minutes ago

பக்தர்கள் மத்தியில் அரங்கேறிய பயங்கரம்.. மதுரையில் சிறுவனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த மர்ம கும்பல்..!

மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…

13 minutes ago

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

37 minutes ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

48 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

54 minutes ago