புது சீரியலை களமிறக்கி ரசிகர்களின் பேவரைட் சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam

Published on:

இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல் என்றாலே மிகப் பிரபலம் தான். அவர்களின் முக்கிய பொழுதுபோக்குகளில் முதலிடம் பிடிப்பது சீரியல் தான். அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிககைகள் பட்டாளமே உள்ளது. சன் டிவி மட்டுமின்றி விஜய் டிவி,  ஜீ தமிழ் என பல தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.

   

காலம் காலமாக சன் டிவி, விஜய் டிவி என இவர்களுக்குள் சீரியல்களை ஒளிபரப்புவதிலும்,  டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடிப்பதிலும் போட்டி இருந்து வருகிறது. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்ப படும் ஒரு சில சீரியல்கள் ஒரு சில மாதங்களிலேயே முடிவடைந்து வருகிறது. ஆனால் சன் டிவி அப்படி இல்லை. ஒரு சீரியலை எடுத்துக் கொண்டால் அதை நிறைவடைய செய்ய பல வருடங்களை எடுத்துக் கொள்ளும்.

ஆனாலும் வருடக்கணக்கில் ஆனாலும் அந்த சீரியலின் சுவாரசியம் மட்டும் குறைவதே இல்லை. அப்படி சன் டிவி சீரியலில் தற்பொழுது முன்னிலையில் இருப்பது எதிர்நீச்சல், கயல், இனியா, ஆனந்த ராகம் ,அன்பே வா போன்ற ஏராளமான சீரியல்கள் உள்ளது. இந்த சீரியல்கள் தொடர்ந்து TRP யிலும் முன்னணி இடத்தையே பிடித்துள்ளது. இந்நிலையில் சன் டிவி ரசிகர்களின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றான  அன்பே வா சீரியல் தான் தற்போது முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சீரியல் 2020ல் தொடங்கப்பட்டது. 3 வருடங்களைக் கடந்து 4-வது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சீரியலின் 1000 எபிசோடுகூட சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. இதனை சீரியல் குழுவினர் கொண்டாடினர். இந்நிலையில் தற்போது அன்பை வா சீரியல் முடிவடைய உள்ளதாகவும், கிளைமாக்ஸ் ஷூட்டிங் எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரியலுக்கு பதிலாக மல்லி என பெயரிடப்பட்ட சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. இதனால் ‘அன்பே வா’ சீரியல் ரசிகர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.