வெங்கட் பிரபு அஜித்தின் 50 ஆவது திரைப்படமான “மங்காத்தா” திரைப்படத்தை பிளாக் பஸ்டராக கொடுத்தவர். அதன் பின் வெங்கட் பிரபு “மங்காத்தா பார்ட் 2” திரைப்படத்தை இயக்குவார் என ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது குறித்த எந்த தகவல்களும் இத்தனை ஆண்டுகளாக வெளிவரவில்லை. எனினும் அஜித் ரசிகர்கள் “மங்காத்தா பார்ட் 2” திரைப்படத்திற்கு இப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க,
வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து “GOAT” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார்.
மேலும் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மோகன் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் “விசில் போடு” சிங்கிள் பாடல் வெளியானது. இந்த பாடல் யூட்யூப் தளத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், “வெங்கட் பிரபு GOAT திரைப்படத்திற்காக வெறிகொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறார். எல்லாத்துக்கும் மேல் அஜித் முன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அஜித் அவரை தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டே இருந்தார்.
வெங்கட் பிரபு தொலைப்பேசியில் தொடர்புகொண்டால் கூட சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருந்தார் அஜித். அஜித்தின் தந்தை இறந்தபோது கூட வெங்கட் பிரபு துக்கம் விசாரிக்க ஃபோன் செய்தால் கூட சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. ஆதலால் நிச்சயம் நாம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடு வெங்கட் பிரபு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.