Categories: சினிமா

தமிழ் சினிமா இப்படிதான் ஓடிகிட்டு இருக்கு… இந்த நிலை மாறனும்… பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை மணி அடித்த சுஜாதா!

Spread the love

எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறை மேல் கடுமையான விமர்சனமும் அதிருப்தியும் இருந்தது. அதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதே போல அவரது சில நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவுமே சுஜாதாவுக்கு திருப்திகரமாக இல்லை என்று அவரே வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் இயங்கி வந்தார். அதே நேரத்தில் அவர் தமிழ் சினிமா பற்றி வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக் கொண்டதில்லை.

குறிப்பாக தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைத்து வைக்கப்படும் கிளிஷேவான காட்சிகள் குறித்து ஒருமுறை அவர் சொன்னது குறிப்பிடத்த்க்கது.  இந்நிலையில் இந்த பதிவில் அவர் தமிழ் சினிமாவில் கடைபிடிக்கப்படும் ஒரு மோசமான விஷயம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை பதிவு செய்துள்ளார்.

அப்படி அவர் புத்தகத்தில் பதிவு செய்த விஷயம் கவனிக்கப்பட வேண்டியது. அதில் “என்னை நிறைய பட பூஜைகளுக்கு அழைப்பார்கள். நான் சென்றதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை பிரித்துப் பார்ப்பேன். அதில் டைட்டில் மட்டும்தான் இருக்கும். என்ன என்று கேட்டால் இனிமேல்தான் திரைக்கதை எழுதனும் என்பார்கள். தமிழ் சினிமாவின் இந்த நிலை மாறனும். இப்படி ஷூட்டிங் போனால் எப்படி அந்த படம் வெற்றி பெறும்.

ஆனால் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் எல்லாம் திரைக்கதையில் பிள்ளையார் சுழி முதல் முற்றும் வரை போட்டபின்னர்தான் ஷூட்டிங்குக்கு செல்வார்கள். அதனால்தான் அவர்கள் படம் வெற்றி பெறுகிறது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

4 minutes ago

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

12 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

20 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

32 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

35 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

42 minutes ago