Categories: சினிமா

தமிழ் சினிமா இப்படிதான் ஓடிகிட்டு இருக்கு… இந்த நிலை மாறனும்… பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை மணி அடித்த சுஜாதா!

Spread the love

எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறை மேல் கடுமையான விமர்சனமும் அதிருப்தியும் இருந்தது. அதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதே போல அவரது சில நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவுமே சுஜாதாவுக்கு திருப்திகரமாக இல்லை என்று அவரே வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் இயங்கி வந்தார். அதே நேரத்தில் அவர் தமிழ் சினிமா பற்றி வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக் கொண்டதில்லை.

குறிப்பாக தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைத்து வைக்கப்படும் கிளிஷேவான காட்சிகள் குறித்து ஒருமுறை அவர் சொன்னது குறிப்பிடத்த்க்கது.  இந்நிலையில் இந்த பதிவில் அவர் தமிழ் சினிமாவில் கடைபிடிக்கப்படும் ஒரு மோசமான விஷயம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை பதிவு செய்துள்ளார்.

அப்படி அவர் புத்தகத்தில் பதிவு செய்த விஷயம் கவனிக்கப்பட வேண்டியது. அதில் “என்னை நிறைய பட பூஜைகளுக்கு அழைப்பார்கள். நான் சென்றதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை பிரித்துப் பார்ப்பேன். அதில் டைட்டில் மட்டும்தான் இருக்கும். என்ன என்று கேட்டால் இனிமேல்தான் திரைக்கதை எழுதனும் என்பார்கள். தமிழ் சினிமாவின் இந்த நிலை மாறனும். இப்படி ஷூட்டிங் போனால் எப்படி அந்த படம் வெற்றி பெறும்.

ஆனால் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் எல்லாம் திரைக்கதையில் பிள்ளையார் சுழி முதல் முற்றும் வரை போட்டபின்னர்தான் ஷூட்டிங்குக்கு செல்வார்கள். அதனால்தான் அவர்கள் படம் வெற்றி பெறுகிறது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

8 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

17 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

27 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

37 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

42 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

47 minutes ago