தஞ்சாவூர் மாவட்டம், பூ சந்தை அருகில் 20 கண் பாலம் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 14 வயது சிறுமி, கைக்குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவனுடன் ஒரு பெண் கல்லணை காவாயில் நடந்து சென்றுள்ளார். திடீரென்று குழந்தைகளுடன் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ந்து போன பொதுமக்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தாய், 14 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் சடலமாக மீக்கப்பட்டனர். கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என அனைத்தையும் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் உடலை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
