தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்தொடர் மின்வெட்டுப் பிரச்சினை, முதலமைச்சர் விஜய்க்குப் புதிய தலைவலியாக மாறியுள்ளது. சென்னை கொளத்தூரில் நள்ளிரவில் சுமார் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பு கோடை காலத்தில் நள்ளிரவிலும் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளதால், இந்தத் திடீர் போராட்டம் முதல்வர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மின்வெட்டு விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பூதாகரமாக வெடிப்பதற்குள் நிலைமையை உடனடியாகச் சரி செய்யுமாறு மின்சார வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்கவும், நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்தடைகளைத் தவிர்க்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் போராட்டம் நடத்திய கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யப் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 20 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக…
திமுகவில் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைத்து, 110 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் பணிகளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். வயது வரம்பு மற்றும்…
ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் மூலம் பாரம்பரியமிக்க சம்பல்புரி புடவைகளை விற்பனை செய்வதாகக் கூறி, நூதன முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட…
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சாலையில் டயப்பர் மட்டும் அணிந்தபடி…
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…