சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி கோபிகா, நீட் மறுதேர்வு குறித்த அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த இவர், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை கோபிகா எழுதியிருந்தார். ஆனால், நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்கள் எழுந்ததால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில், மீண்டும் தேர்வை எதிர்கொள்வது குறித்து அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரது மரணம் குறித்து கொங்கணாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஏற்கனவே ஒரு மாணவி இதே காரணத்திற்காக உயிரிழந்த நிலையில், தற்போது சேலத்திலும் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…