டேட்டிங் செயலி மூலம் பழக்கம்…! நள்ளிரவு பெண்ணை நம்பி சென்ற மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மக்களே உஷாரா இருங்க…!!

By Devi Ramu on ஆவணி 28, 2025

Spread the love

சென்னை மாவட்டம் மயிலாப்பூரைச் சேர்ந்த அரவிந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இசை கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் செயலி அறிமுகமான ஒரு பெண் இரவு 12 மணிக்கு மேல் மயிலாப்பூர் வடக்கு மாடவீதிக்கு அருகே வந்தால் இன்ப பரிசு தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் அந்த வாலிபரும் இரவு யாருக்கும் தெரியாமல் அங்கு சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.

ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் அரவிந்தை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அரவிந்த் ஜிபே மூலம் அவர்களுக்கு 1300 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். மேலும் அரவிந்தை ஆபாசமாக வீடியோ எடுத்து இதை வெளியே கூறினால் சோசியல் மீடியாவில் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர்.

   

அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த அரவிந்த் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாங்கொல்லை கார்டன் பகுதியைச் சேர்ந்த அஜய், சூர்யா ஆகிய இரண்டு பேர் அரவிந்த்தை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.