BREAKING: EPS-க்கு விழுந்த திடீர் அடி… எதிராக திரும்பிய தீவிர விசுவாசி… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on பங்குனி 30, 2026

Spread the love

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி (EPS) அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் சுயேச்சையாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ்-ஸின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பாஸ்கரின் இந்தத் திடீர் முடிவு தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், சீட் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நாமக்கல் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பாஸ்கர், இந்த முறை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனப் பெரிதும் நம்பியிருந்த சூழலில், உட்கட்சிப் பூசல் தற்போது வீதிக்கு வந்துள்ளது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.