“இனி ‘இதை’ மறைக்க முடியாது!.. தனியார் பள்ளிகளுக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு”..!!

Spread the love

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விபரங்களைக் கோரி கடந்த 2022-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் உரிய முறையில் கையாளாமல், பள்ளிகளின் முதல்வர்களுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இரண்டரை ஆண்டுகளாகியும் உரிய தகவல் வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு ₹25,000 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய இருவரையும், வரும் ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரர் கோரிய கட்டண விபரங்கள் அனைத்தையும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கல்வித் துறைக்குக் கெடு விதித்துள்ளார்.

மாணவர்களின் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளிலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விபரங்களைக் கட்டாயமாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திலும் வகுப்பு வாரியான கட்டணங்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும், இதனை உறுதி செய்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு ஆணையம் ஆணையிட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

6 minutes ago

பாஜகவில் விரிசல்..? அண்ணாமலையின் புதிய கட்சி திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நபர் யார்..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் கூட்டணி…!!

பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…

7 minutes ago

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

27 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

37 minutes ago

தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…

42 minutes ago

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

47 minutes ago