“இனி ‘இதை’ மறைக்க முடியாது!.. தனியார் பள்ளிகளுக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு”..!!

Spread the love

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விபரங்களைக் கோரி கடந்த 2022-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் உரிய முறையில் கையாளாமல், பள்ளிகளின் முதல்வர்களுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இரண்டரை ஆண்டுகளாகியும் உரிய தகவல் வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு ₹25,000 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய இருவரையும், வரும் ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரர் கோரிய கட்டண விபரங்கள் அனைத்தையும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கல்வித் துறைக்குக் கெடு விதித்துள்ளார்.

மாணவர்களின் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளிலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விபரங்களைக் கட்டாயமாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திலும் வகுப்பு வாரியான கட்டணங்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும், இதனை உறுதி செய்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு ஆணையம் ஆணையிட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

8 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

8 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago