திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி கட்டமைப்பில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறார். சமீபத்தில் ஆகஸ்ட் 22-இல் நிறைவேற்றப்பட்ட செயற்குழு தீர்மானங்களைத் தொடர்ந்து, குறுகிய காலத்திற்குள் 110 மாவட்டங்களாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிளைக் கழகம் முதல் மாவட்ட அளவிலான பதவிகள் வரை மொத்தம் உள்ள சுமார் 6 லட்சம் கட்சிப் பொறுப்புகளையும் முறையான உள்கட்சித் தேர்தல் மூலமே நிரப்ப அவர் திட்டமிட்டுள்ளார். எனினும், இந்த திடீர் மாற்றங்கள் மற்றும் மாவட்டப் பிரிப்பு மூத்த நிர்வாகிகள் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் ‘குறுநில மன்னர்கள்’ எனப்படும் செல்வாக்குமிக்க நிர்வாகிகளின் ஆதரவாளர்களே பதவிகளுக்கு வருவார்கள் என்றும், உட்கட்சிப் பூசல் உச்சமடையும் என்றும் சீனியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், திமுக தலைமையின் கணக்கு வேறாக உள்ளது. தேர்தல் நடக்கும்போது புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, வேட்பாளர்கள் செய்யும் செலவுகள் மூலம் தொண்டர்களுக்குப் பொருளாதார நலன்களும், உரிய மரியாதையும் சென்று சேரும் என தலைமை கணித்துள்ளது. மேலும், தேர்தல் தோல்வியால் கட்சி சோர்ந்து போயிருப்பதாக உருவாகியுள்ள பிம்பத்தை உடைக்க இந்தச் சுறுசுறுப்பான நடவடிக்கை அவசியம் என ஸ்டாலின் கருதுகிறார்.
அதேபோல், கட்சித் தேர்தலின் போது ஏற்படுகின்ற போட்டியும் மோதல்களும் திமுகவுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்ற இன்னும் கடுமையான ஆர்வம் இருக்கிறது என்பதை வெளியுலகிற்கு உணர்த்தும். இது குறிப்பாக ‘ஜென் ஸி’ (Gen Z) எனப்படும் தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் திமுகவைப் பற்றிய உரையாடல்களை உருவாக்கி, அவர்களைக் கட்சியை நோக்கி ஈர்க்க உதவும் என்பது தலைமையின் எதிர்பார்ப்பாகும். சீனியர் – ஜூனியர் போட்டி உருவானாலும், முடிந்தவரை அதிக அளவில் இளைஞர்களை புதிய நிர்வாகிகளாகக் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சில மாவட்டங்களில் இளைஞர்கள் வெற்றி பெற்று பொறுப்புக்கு வரும் பட்சத்தில், அது மாநிலம் முழுவதிலும் உள்ள மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் புதிய உற்சாகத்தை அளிக்கும். உள்கட்சித் தேர்தல் தேவையா என மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பினாலும், புதிய தலைமுறையைக் கட்சிக்குள் வலுவாக இறக்குவதற்கு இதுவே சரியான வழி என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதேவேளையில், இந்த உள்கட்சித் தேர்தல் திமுகவிற்குப் புதிய பலத்தைச் சேர்க்குமா அல்லது கோஷ்டி மோதல்களை அதிகரித்து பின்னடைவை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தங்களின்…
திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என மு.க.ஸ்டாலின் அதிரடி மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலை,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்தவர் பாலக் (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது…
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…