தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளார். தனது சுயவிவரக் குறிப்பில் (Bio) ‘முதலமைச்சர்’ என்ற பதவியைப் நீக்கிவிட்டு, ‘திமுக தலைவர்’ என்பதை மட்டும் அவர் பதிவிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
தற்போது காபந்து முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேರಳாவில் இருந்து சென்னை திரும்பியதும் அவரைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் கவர்னரிடம் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
