மக்களே உடனே கிளம்புங்க… தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க….!

By Nanthini on தை 3, 2026

Spread the love

SIR பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடமாறி சென்றவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த சிறப்பு முகாம் முதல் கட்டமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள இன்றும் நாளையும்  இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.