சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25) ஆகிய இருவர், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களாக அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதுடன், சிறுவனுக்கு உணவு மற்றும் செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சிறுவனின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது நடந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
