கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில் மார்கழித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர். அப்போது அங்கிருந்த சில இந்து அமைப்பினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் “வீரசவர்க்கருக்கு ஜே” எனத் தொடர்ந்து கோஷமிட்டனர். கோவில் திருவிழாவில் இத்தகைய அரசியல் கோஷங்கள் எழுப்பப்பட்டது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியது.
கோவில் திருவிழாவில் பக்தர்களை பார்த்து சோறு திங்கிறியா இல்ல பீய திங்கிறியா என்று கேட்ட அமைச்சர் சேகர்பாபு @PKSekarbabu #DMKFailsTN @mkstalin pic.twitter.com/o77uTpKgsk
— ரெட் (@LegenD_AK_tweet) January 2, 2026
