தமிழகத்தில் இன்று முதல்… ஆயுத பூஜை விடுமுறைக்கு அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு TNSTC சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 26 இன்று முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் கூட்ட நெரிசரை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து சுமார் 3,130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் www.TNSTC.in என்ற இணையதளத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.