தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (ஏப்ரல் 27, 2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வின் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,230-க்கு விற்பனையாகிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
