“வாயை மூடு.. வெளியே போ” புத்தகம் வாங்காததால் மாணவரின் பெயரை நீக்கி விடுவதாக மிரட்டிய தலைமை ஆசிரியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

பள்ளியில் புத்தகங்களை வாங்காத காரணத்திற்காக, மாணவனின் தாயிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆத்திரமடைந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வாயை மூடு! இங்கிருந்து வெளியே போ. உன் குழந்தைகளின் பெயரை இப்போதே வருகைப் பதிவேட்டில் இருந்து நீக்கப் போகிறேன்!” என்று ஆவேசமாக கத்தியுள்ளார்.

கல்வி கற்க வேண்டிய இடத்தில் ஒரு தலைமை ஆசிரியரே இப்படித் தரக்குறைவாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகார்கள் தற்போது கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளன.