பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றோடு முடிவடைந்து விட்டது . 100 நாட்களை வெற்றிகரமாக இந்த சீசன் டாக்சிக் இல்லாத சீசன் என்று பெயர் பெற்றிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புறம் பேசிக் கொண்டும் இல்லாமல் அனைவரும் விளையாட்டு முனைப்போடு விளையாடினார்கள்.
மற்ற சீசன்களை விட இந்த சீசன்களில் பல ட்விஸ்ட்டுகள் இருந்தது. ஆரம்பமே கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று தான் இந்த சீசன் தொடங்கியது. அதற்குப் பிறகு சீசன் நடுப்பகுதியில் அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என்று கூறிவிட்டார் பிக் பாஸ். அதே போல் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கூட இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடைபெற்றது.
24 போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோர் இருந்தார்கள். இதில் ரயான் முதலாவதாக எலிமினேட் ஆனார். பின்பு பவித்ரா எலிமினேட் ஆனார். கடைசியாக விஷால் எலிமினேட் செய்யப்பட்டார். இறுதியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இரண்டு பேரும் மேடையில் இருந்த நிலையில் முத்துக்குமரன் winner ஆகவும், சௌந்தர்யா Runner ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
உண்மையிலேயே முத்துகுமரன் ஆரம்பம் முதலே தனது விளையாட்டில் கவனம் செலுத்தி சரியான முறையில் விளையாடி வந்திருக்கிறார். அவருக்கு வெற்றி கோப்பை கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்த சீசனுடைய விருது வென்ற அனைவருடைய தீர்ப்பும் ரசிகர்களால் நல்ல வரவேற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை முடித்த கையோடு சௌந்தர்யா தனது காதலர் விஷ்ணுவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தி வைரலாகி வருகிறது
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…