சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி பேசியதாவது, நடிகராக வாய்ப்பு கிடைக்காத காலத்தில் நான் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்தேன். அப்போது கட்டடங்களுக்கு பெயிண்ட் அடித்தேன். ஒரு கட்டடத்தில் பெயிண்ட் அடித்துவிட்டு மதியம் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அந்த பில்டிங் ஓனர் வருகிறார் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை எல்லாம் எந்திரிச்சு போங்க என விரட்டினார்கள். ஒருவர் கோபமா வந்து என் சாப்பாட்டு இலையை பிடித்து இழுத்து தள்ளிப் போட்டார். நிம்மதியா சாப்பிட விடலே.
அந்த கட்டடம் இப்போது பெரிய ஜவுளிக்கடையா இருக்குது. அங்கு குடும்பத்துடன் துணி எடுக்க சமீபத்தில் போனோம். என்னைய பார்க்க கூட்டம் அதிகமாயிடுச்சு. அப்போது என் சாப்பாட்டு இலையை இழுத்து போட்ட அந்த மேனேஜர் என்கிட்ட வந்து, சார் நீங்க எம்டி சார் ரூம்ல வந்து உட்காருங்க. கூட்டம் அதிகமாகுது. அங்க டிரஸ்சை எல்லாம் எடுத்துட்டு வந்து காட்டச் சொல்றேன்னு சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியலே, ஆனால் எனக்கு அவரை நல்லாத் தெரிஞ்சது. ஆனா நான் எதுவும் அவர்கிட்ட சொல்லலே என்று நடிகர் சூரி வேதனையாக கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…