“எங்களுக்கு பணம் தான் முக்கியம்”… இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்ற தந்தையையே கொன்ற மகன்கள்… பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த கொடூர சம்பவம்…!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குடம் தெருவை சேர்ந்த கணேசன் (56) என்பவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்ததாக போலீசில் மகன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்த நிலையில் கணேசனின் குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக இன்சுரன்ஸ் நிறுவனம் போலீசில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரிய வந்துள்ளது.

அந்த இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக கணேஷின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மணவூரை சேர்ந்த பாலாஜி, பிரசாந்த், நவீன் குமார், ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தினகரன் ஆகியோருடன் சேர்ந்து தங்களுடைய தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரிகரன் மற்றும் மோகன்ராஜ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையையே மகன்கள் பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

3 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

3 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

4 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

4 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

4 மணத்தியாலங்கள் ago