Categories: சினிமா

அப்பாவின் கடைசி ஆசை.. ‘காலமும் நேரமும் தான் கை கொடுக்கணும்’.. விஜயகாந்த் மகன் உருக்கம்..!

Spread the love

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான் கைகொடுக்க வேண்டும் என்று அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமாக பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் இன்று அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பிற மக்களின் துன்பத்தை துடைப்பதற்காக பாடுபட்டவர்.

அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலும் தனது பலத்தை நிரூபித்தவர். கடந்து சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினந்தோறும் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை கடந்த மே ஒன்பதாம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வாங்கிக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

விஜயகாந்துக்கு விருது வழங்கியது தொடர்பாக பல நடிகர்கள், அரசியல், தலைவர்கள் என வீடியோ வெளியிட்டு தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் விஜயகாந்த் மறைந்த சில நாட்களில் அவரை வைத்து ஊமை விழிகள் என்ற படத்தை தயாரித்த ஆபாவாணன் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி தயாரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி விஜயகாந்த் camerio ரோலில் நடித்திருக்கின்றார் .இதைத்தொடர்ந்து விஜயகாந்த் அவரின் மகனான சண்முக பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த வருகின்றார். படைத்தலைவன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இது தொடர்பான டிரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவரின் மூத்த மகனான விஜய பிரபாகரன் சமீபத்தில் ஒரு உருக்கமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் அதில் பிரபல நடிகர் ஜெட்லியின் சீன படமான மை ஃபாதர் இஸ் தி ஹீரோ என்ற படம் விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த படமாம். விஜய பிரபாகரனும் விஜயகாந்தும் சேர்ந்து அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் மிகவும் ஆசைப்பட்டு இருக்கின்றார் ஆனால் அது கடைசி வரை நடக்காமலேயே போய்விட்டதாக விஜய பிரபாகரன் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

43 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

46 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago