ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த டேபாஷிஷ் நாயக் (45) என்பவர் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர். அவருடைய தாய் (65) தனது சேமிப்பு பணத்தை அடிக்கடி மகனிடம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது தாயிடம் மது குடிப்பதற்காக டேபாஷிஷ் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது தாய் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துள்ளார்.
இதனால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் வலியால் அவர் அலறி துடித்தார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக ஓடி வந்து பார்த்தபோது அவர் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் டேபாசிஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்தை தீக்காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மகனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
