விழுப்புரம் மாவட்டம் ஒடுவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(60). அவர் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர். இவருக்கு இரண்டு மனைவிகள். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இரண்டாவது மனைவியின் மகன் சந்திரசேகருக்கும்(40) பழனிக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
பழனி முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு அனைத்து சொத்தையும் கொடுப்பதாக கூறப்பட்டது. இதனால் அதே ஊரில் இருக்கும் பூர்வீக சொத்து முழுவதையும் தனது பெயருக்கு மாற்றி தருமாறு சந்திரசேகர் கூறியுள்ளார். அதற்கு பழனி அனைவருக்கும் சமமாக சொத்தை பிரித்து தருவேன். அந்த நிலத்தை உனது பேருக்கு எப்படி மாற்றி எழுதி தர முடியும்? என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த சந்திரசேகர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பழனியை டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…