போலவரம் மாவட்டம் சிந்துறு மண்டலம் சொகிலேரு வியூ பாயிண்ட் அருகே, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆறு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னதாக அரக்கு, வஞ்சங்கி மற்றும் மாரேடுமில்லி ஆகிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டுவிட்டு, இறுதியாக சொகிலேரு பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளித்துக் கொண்டிருந்த ஆறு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு ஐந்து பேரை பத்திரமாக மீட்டனர்.
எனினும், விஜயவாடாவைச் சேர்ந்த 26 வயதான மென்பொருள் பொறியாளர் கொஸ்துரி நிலேஷ் என்பவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன நிலேஷைத் தேடும் பணியில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் மக்களின் உதவியோடு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நிலேஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…
செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…
கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள், தமிழக அரசியல் மற்றும் இணையதள தளங்களில்…