அம்மாடியோ.. இத்தனை கோடியா..? அம்பானி மகன் திருமணத்தில் பாட்டு பாட வெளிநாட்டு பாடகி ரிஹானாவுக்கு இவ்வளவு சம்பளமா..?

By Begam

Published on:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட திருமண விழாவிற்கு முன்னதாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

   

மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் வணிக மற்றும் தொழில்நுட்ப உலகின் முன்னணி பிரமுகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த்-ராதிகா திருமணத்தில் பாட்டுப் பாட அமெரிக்காவில் இருந்து பிரபல பாடகியான ரிஹானாவை ஜாம்நகருக்கு வரவழைத்திருக்கிறார்கள். இந்தியாவில் ரிஹானா பாட்டு பாடப் போவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ரிஹானாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து பாட்டு பாட அவருக்கு ரூ. 74 கோடி கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்த், ராதிகா திருமணத்தில் எல்லாமே பிரமாண்டமாக இருக்க வேண்டும். எதுவும் குறையாக இருந்துவிடக் கூடாது. அதனால் செலவை பற்றி எல்லாம் பார்க்காமல் ஏற்பாடு செய்திருக்கிறாராம் அப்பா முகேஷ் அம்பானி. என்னப்பா சொல்றீங்க ஒரு கல்யாண வீட்டில் பாட ரூ. 74கோடியா..? என தற்பொழுது மக்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.