Categories: சினிமா

கோலிவுட்டையே அண்ணாந்து பார்க்க வைத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. அமரன் வெற்றியால் பல கோடி உயர்ந்த சிவகார்த்திகேயன் சம்பளம்..?

Spread the love

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் முன்னணி நடிகர்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுக்க முடியாது என்ற நிலையில் தான் இயக்குனர் மற்றும் பட தயாரிப்பாளர்கள் தற்போது உள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் தான் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முடியும் என்ற சூழலும் தற்போது உருவாகிவிட்டது. அதனால் தான் அவர்களை சூப்பர் ஹீரோக்களாக காட்ட வேண்டிய சூழல் உள்ளது. நடிகர் விஜய் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க தொடங்கிய நிலையில் தன்னுடைய சம்பளத்தை அப்படியே 100 கோடியாக உயர்த்தினார். தொடர்ந்து லியோ திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில் 200 கோடியாகவும் தற்போது தளபதி 69 படத்துக்கு 250 கோடியாகவும் தன்னுடைய சம்பளத்தை விஜய் உயர்த்தியுள்ளார்.

விஜய்யைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் இருவரும் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர். இறுதியாக ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் வேட்டை நடத்தி இருந்த நிலையில் ரஜினி 200 கோடி வரை கூலி திரைப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதனைப் போலவே அஜித் இறுதியாக நடித்த துணிவு திரைப்படம் 200 கோடி வசூல் செய்திருந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு 105 கோடி சம்பளம் பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு 175 கோடி வரை அவர் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் மூலமாக 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பார்த்துள்ள நிலையில் அவரும் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை 100 கோடி கேட்பாரா என்ற விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது.

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்தால் அவர் கேட்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களே சம்பளத்தை உயர்த்த தயாராகி விடுவார்கள். அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை தற்போது 60 கோடி அளவுக்கு உயர்த்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையை அமரன் படைத்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago