Connect with us

CINEMA

“நெல்சன் உடன் சேர வாய்ப்பே இல்லை”.. மேடையில் உண்மையை போட்டு உடைத்த சிவகார்த்திகேயன்..

சின்னத்திரையில் தொகுப்பாளராக தொடங்கி இன்று கோலிவுட்டின் பிரின்ஸ் ஆக வளம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். மெரினாவில் ஆரம்பித்த இவரது பயணம் சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

   

 

வேலைக்காரன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என சற்று தோல்விகளை சந்தித்த சிவகார்த்திகேயனை மீண்டும் மேலே கொண்டு வந்தது டாக்டர் படம் தான். கோலமாவு கோகிலா என்ற ஹிட் படத்தை கொடுத்த நெல்சன் இரண்டாவதாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை கொடுத்தார். அது ஹிட் அடிக்க விஜய்யுடன் பீஸ்ட், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக முன்னேறினார் நெல்சன்.

இந்தநிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் அடுத்து எப்போது நெல்சன் உடன் இணைவீர்கள் என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த சிவகார்திகேயன், எங்கே இணைவது, அவர் 600 கோடி வரை ஹிட் கொடுத்து வருகிறார். பெரிய பெரிய படங்கள் செய்கிறார். நாங்கள் இணைவதற்கு வாய்ப்புகள் கம்மி தான்.

ஆனால் நெல்சனின் வளர்ச்சி எனக்கு சந்தோசம் அளிக்கிறது. அவர் நன்றாக இருக்க வேண்டும் என கூறினார் சிவகார்த்திகேயன். நெல்சன் சிவகார்த்திகேயன் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது நமக்கு தெரியும். இந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும், மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top