CINEMA
இதுக்கு ஓகே-னா சொல்லுங்க பண்ணலாம்.. சிவகார்த்திகேயன் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்ஷசன்.. உண்மையை சொன்ன பிரபலம்..
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த 2 வாரங்களாக பல நேர்காணல்களில் கலந்துக்கொண்டு, அயலான் படம் குறித்து பேசி, பேசி பிரமோ செய்து வருகிறார் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், சமீபத்தில் வெளியான அயலான் டீசரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு தியேட்டர் வணிகம் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேர்காணலில் பேசும் சிவகார்த்திகேயனிடம் எந்த செய்தியாளருமே எனக்கு துரோகம் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்று இமான் கூறிய குற்றச்சாட்டு குறித்து எந்த கேள்வியும் கேட்பது இல்லை. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பங்கேற்ற மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மியிடம் கேட்ட போது அவர் கூ;றியதாவது, இது அவரது நேர்காணங்களை பார்க்கும் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் எழுந்த சந்தேகம்தான். அதுபற்றிய உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதாவது சிவகார்த்திகேயனிடம் நேர்காணல் செய்ய அனுமதி, நேரம் கேட்கும்போதே இந்த நேர்காணலின் போது சிவகார்த்திகேயனிடம் இமான் குறித்து எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று கண்டிசன் போடப்படுகிறது. சத்தியம் வாங்காத குறையாக, அவர்களிடம் அதற்கு உறுதிமொழி வாங்கிய பின்னரே அவர்களை, சிவகார்த்திகேயனை சந்திக்க அனுமதிக்கின்றனர். அதனால் அந்த கேள்வியை கேட்க முடியாமல், ஒரு தொகுப்பாளர் போல சிவகார்த்திகேயன் பேசுவதை மட்டுமே பதிவு செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். அதற்காக சிவகார்த்திகேயன் நல்லவராகி விட முடியாது.
நேர்காணல் ஒன்றில் அட்லி குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இந்தி படவுலகில் ஷாருக்கானை வைத்து 1200 கோடி ரூபாய் வசூல் சாதனை எல்லாம் சாதாரண விஷயமல்ல. அவரை காப்பியடிக்கிறார் என்று கூறுவது தவறு. அவரை போன்ற சிறந்த இயக்குநர்களை, தமிழ் சினிமா கொண்டாட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். துவக்கத்தில் நான் விமல் மாதிரி வந்தாலே போதும் என்ற எண்ணத்துடன் சினிமாவுக்குள் வந்தவர்தான் சிவகார்த்திகேயன். ஆனால் முன்னணி நடிகரான பின், ரஜினி கமலை விட பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதனால் அட்லி இயக்கத்தில் நடிக்க, அவரிடம் வாய்ப்பை பெற இப்போது அவரை பாராட்டி பேசுகிறார் என்றும் கூறியிருக்கிறார் பிஸ்மி.