Categories: சினிமா

பராசக்தியை தொடர்ந்து வெளியான ஏ.ஆர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில்.. இதுவும் அந்த நடிகரின் படத்தோட காப்பி தானா..!

Spread the love

கோலிவுட்டின் கமர்சியல் ஹீரோவாக தற்போது உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவை கொண்டாடும் அளவுக்கு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். டாக்டர், டான், மாவீரன் மற்றும் அயலான் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் இறுதியாக அமரன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தார். இந்த படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெயரையும் பெற்றுள்ளார். அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் தயாரித்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 350 கோடி ரூபாய் வரை இந்த திரைப்படம் வசூலித்திருந்தது.

திரையரங்குகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதில் ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்டோரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கின்றனர். அமரன் திரைப்படம் எப்படி தன்னுடைய கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றதோ அதனைப் போலவே பராசக்தி திரைப்படமும் கொண்டு போகும் என்ற நம்பிக்கையில் சிவகார்த்திகேயன் உள்ளார். இந்த திரைப்படத்தை புறநானூறு என்ற பெயரில் சூர்யாவை வைத்து முதலில் சுதா இயக்க இருந்த நிலையில் அதன் பிறகு சூர்யா விலகியதால் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார்.

இப்படியான நிலையில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாசுடன் சிவகார்த்திகேயன் இணைந்தார். திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்த நிலையில் சல்மான் கானை வைத்து முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தின் வேலைகளை தொடங்க சொல்லி அவருக்கு பிரஷர் வந்ததால் இப்படத்தின் சூட்டிங்கை நிறுத்திவிட்டு அவர் மும்பைக்குச் சென்று விட்டதாக தகவல் பரவியது. தற்போது ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயனை போலவே ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் கடைசியாக ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இந்த நிலையில் சிவக்கார்த்திகேயன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனும் ஏ.ஆர் முருகதாஸும் இணையும் படத்தின் பெயர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமரன் மற்றும் மாவீரன் என பழைய படங்களின் டைட்டிலில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். அதன்படி தற்போதும் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி என்ற படத்தின் டைட்டிலை தான் இந்த படத்திற்கும் வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஏன் ஒரே பார்முலாவை பின்பற்றுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

19 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago