பீகார் மாநிலம், ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ளனர். இதில் மூத்த சகோதரியின் மகனான கோலு என்ற வாலிபர், சிறுவயது முதலே தனது தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த வகையில், மம்தா குமாரிக்கும் அவரது அக்கா மகனான கோலுவிற்கும் இடையே சித்தி-மகன் என்ற உறவையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளது. இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்களது நெருக்கமான நடத்தையின் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் ஆரம்பத்தில் ஏற்படவில்லை.
இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக உறவினர்கள் அனைவரும் ரோஹிவாவில் உள்ள வீட்டில் ஒன்றாகக் கூடியுள்ளனர். அப்போது அங்கு வந்திருந்த கோலுவும் மம்தாவும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வெளியில் சென்றும், இரவில் தனிமையிலும் இருந்துள்ளனர். ஒரு நாள் இரவு, மம்தாவின் தந்தை மருந்து எடுப்பதற்காக அவரது அறைக்குச் சென்றபோது, அங்கிருந்த மம்தாவையும் கோலுவையும் தவறான நிலையில் பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த தந்தை இருவரையும் அடித்து சத்தமிட்டதால், உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதன் முடிவில், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து மம்தா மற்றும் கோலுவை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், தாயின் சொந்த தங்கையை (சித்தியை) அக்கா மகன் திருமணம் செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…