பெங்களூர் யாத்தகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக அந்த பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தை பெற்ற அந்த பெண்ணிற்கு உதவியாக அவருடைய 16 வயது தங்கை வீட்டிற்கு வந்து வேலைகள் செய்து வந்துள்ளார் .இந்த நிலையில் மனைவி இரண்டாவது குழந்தை பெற்றிருந்ததால் வாலிபருக்கு கொழுந்தியாள் மீது ஆசை வந்துள்ளது. தன்னுடைய வீட்டில் தங்கி இருந்ததால் வாலிபர் அந்த சிறுமியிடம் எல்லை மீறி நடந்து கொண்டார். மேலும் சிறுமி மிரட்டி பலாத்காரமும் செய்துள்ளார்.
இது குறித்து யாரிடமும் சொன்னால் உன்னுடைய அக்காளையும், குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் வெளியே சொல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார்கள். அப்போது அக்கா கணவர் தான் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் .இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…