சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், கொலு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஸ்ருதியின் அம்மா பூஜையில் கலந்து கொள்ள வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர் தனியாக வருவதால் முத்து எங்க வீட்டுக்கு எல்லாம் நீங்க வர மாட்டீங்களே உங்க வீட்டுக்காரர் வேலையா வெளியூர் போயிட்டாங்களா என்று கூறி கிண்டல் செய்கிறார். அப்படி எல்லாம் இல்ல அவருக்கு வர டைம் இல்லை என்று ஸ்ருதியின் அம்மா கூறுகிறார். பிறகு ரவியும் ஏன் உங்க அப்பா இப்படி பண்றார் கல்யாணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் ஒரு டைம் கூட நம்ம வீட்டுக்கு வரல எங்கள் அவமானப்படுத்துகிறாரா என்று கேட்கிறார். இது பெண்கள் கலந்து கொள்ளும் விழா அவருக்கு இங்க என்ன வேலை அவர் ஏன் வரலன்னு நீ தான் அவர்கிட்ட போய் கேக்கணும் என்று ஸ்ருதி கூறிவிட்டு செல்கிறார்.
பிறகு வித்யா பூஜையில் கோலாட்டம் ஆடுவதற்கான பொருட்களை வாங்கிக் கொண்டு வருகிறார். பூஜை நடந்ததும் அனைவரும் கோலாட்டம் ஆடுகின்றனர். அப்போது முத்து அனைவரையும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்துவையும் ஆட அழைக்கும் நிலையில் வித்யா செல்போனை வாங்கிக் கொண்டு வீடியோ எடுப்பது போல நடிக்கிறார். பிறகு நாசுக்காக செல்போனை தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். ரோகினியும் சென்று வீடியோவை பார்த்து தங்கள் செல்போனில் அனுப்ப பார்த்துக் கொண்டிருக்கும்போது முத்துவும் மீனாவும் அந்த சமயத்தில் உள்ளே வருகின்றன.
முத்து விளையாட்டாக மீனாவை துரத்தி வர மீனா ரோஹினியை இடித்ததும் செல்போன் கீழே விழுந்து உடைந்து விடுகிறது. மீனா செல்போனை எடுத்து பார்த்ததும் அது முத்துவின் செல்போன் என்று தெரிகிறது. உடனே நாங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தோம் என்ற ரோகிணி சமாளிக்கிறார். பிறகு முத்து செல்போனை வாங்கிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். செல்போன் உடைந்துவிட்டது இனி எப்படி அந்த வீடியோவை எடுக்க முடியும் என்று ரோகினி வித்யாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும், ரோகினியின் அம்மா வீட்டுக்கு சென்று பூஜையில் கலந்து கொள்ள ரோகிணியின் அம்மாவையும் மகனையும் அழைத்து வர முடிவு செய்கின்றனர். அங்கு சென்று வாங்க பூஜைக்கு கலந்து கொள்ள வீட்டுக்கு போகலாம் என்று மீனா கூறும் நிலையில் ரோகிணியின் அம்மா நான் எல்லாம் அந்த பூஜையில் கலந்து கொள்ள கூடாது நான் வரவில்லை என்று கூறி சமாளிக்கிறார். ஆனால் மீனா மிகவும் வற்புறுத்தி எப்படியாவது வந்து விடுங்கள் என்று கூறியதும் அவர் வீட்டிற்கு கிளம்ப தயாராகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…