#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் மனோஜின் பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கிறது. அதை வீட்டில் கூறி அனைவர்க்கும் ஸ்வீட் தருகிறான். அண்ணாமலை வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் வீட்டில் மனோஜ் தனது பிசினஸில் அடுத்த லெவலுக்கு செல்வதாக கூறிக் கொண்டிருக்கும் போது இது எல்லாரும் தான் பண்ணுவாங்கன்னு முத்து சொல்ல ரோகிணி கோபப்பட்டு மனோஜ் ரொம்ப டேலண்ட் ஆனவர் அப்படி பேசாதீங்க முத்து என்று கூறுகிறார். அடுத்ததாக மனோஜ் தனது அம்மாவிடம் அவன் கிடக்கிறான் விடுங்கம்மா நான் இன்னொரு நல்ல விஷயமும் சொல்றேன் நானும் ரோகிணியும் ஒரு பங்களா வாங்கலாம்னு பார்த்து வச்சிருக்கோம் என்று கூறுகிறான். இதை கேட்டவுடன் விஜயாவுக்கு மகிழ்ச்சி கூடி விடுகிறது.
அதுமட்டுமில்லாமல் மனோஜூம் ரோகிணியும் விஜயாவுக்கு தங்கத்தில் வளையல் வாங்கி கொடுக்கிறார்கள். அண்ணாமலைக்கு வேட்டி சட்டை எடுத்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இதை பார்த்தவுடன் விஜயாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டு பெருமையாக பேசுகிறார். என் பையன் மனோஜ் என்ன பங்களால உட்கார வைக்க போகிறான் என்று கூறுகிறார்.
அடுத்ததாக அண்ணாமலை நான் வேலைக்கு செல்ல போகிறேன் என்று கூறுகிறார். அப்போது வேண்டாம் என்ற முத்து சொல்கிறான். உடனே வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறார்கள். மாமாவுக்கு வீட்டிலிருந்து போரடிக்கும் அதனால அவங்க காலாற போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார்கள். அடுத்ததாக மாடியில் மீனா தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து வந்து என்னாச்சு என்று கேட்கும் போது இந்த வீட்டில் எல்லாரும் வாழனும் தானே மாமாவோட ஆசை இப்போ மனோஜ் ரோகினி வீடு வாங்கிட்டு போயிட்டாங்கன்னா இந்த வீடு வெறுமையாய் ஆகிடும் மாமா வருத்தப்படுவாங்களே என்று மீனா கூறுகிறார்.
உடனே முத்து அவன் வீடு வாங்கி போற அப்போ பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். அடுத்ததாக அண்ணாமலை வேலைக்கு கிளம்புகிறார். அப்போது மீனா சாப்பாடு கட்டி வந்து கொடுக்கிறாள். இதை பார்த்தவுடன் கண்கலங்கி விடுகிறார் அண்ணாமலை. எங்க அம்மா தான் எனக்கு வேலைக்கு போகும்போது சாப்பாடு கட்டி தருவாங்க. இப்போ இத பாத்ததும் அம்மா ஞாபகம் வந்துடுச்சு என கண்கலங்குகிறார். அடுத்ததாக ரோகிணி தனது அம்மாவையும் மகனையும் பார்க்கப் போகிறார் அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் 'கோ-பே' (Copay) மற்றும் 'டிசீஸ் கேப்' (Disease Cap)…