அனுஷ்கா முதல் சாய்பல்லவி வரை.. கல்யாணம் பண்ணிக்காமல் சோலோவாக சுத்தும் நடிகைகள்..

By Mahalakshmi

Updated on:

தமிழ் சினிமாவில் 80s  முதல் 90s  வரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகள் பலர் இன்றும் வாழ்வில்  சோலோவாகவே டூயட் பாடி வருகிறார்கள். சுமார் 35 வயதை கடந்த நிலையிலும் திருமணம் ஆகாமல் சிங்கிள் நடிகைகளாக  சினி உலகில் சோலோவாக சிறகடித்து  பறந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி காண்போம்.

   

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நாயகி தான் அனுஷ்கா செட்டி. தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி முடித்துள்ளார். இருப்பினும், இவர்  இன்றளவும் சிங்கிள் நாயகியாகவே வலம் வருகிறார். பல பிரபலங்களுடன் இவர் திருமண கிசுகிசுவில் அடிபட்டாலும்  திருமணம் குறித்து இன்றளவும் மௌனம் காத்து வருகிறார்.

சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த ஜனவரி 10ஆம் தேதியோடு தனது 34 ஆவது வயதை கடந்து பயணித்து வருகிறார். தமிழ் திரை உலகிலும், தெலுங்கு உலகிலும் முன்னணி நடிகையாக விளங்கிவரும் இவர் இப்போது வரை சிங்கிள் நாயகியாகவே இருக்கின்றார். தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நாயகி தான் சாய் பல்லவி.  இவருடைய சகோதரிக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் வயது 31ஐ கடந்து விட்டது என்ற பொழுதும், இன்றளவும் சிங்கிள் நாயகியாகவே வலம் வருகின்றார்.

திரிஷா, 40 தொட்டுவிட்ட பொழுதிலும் இன்றளவும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மட்டுமல்லாமல் 2K கிட்ஸ் மத்தியிலும் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர். கடந்த சில காலமாக ஒரு ரீஎன்ட்ரி கொடுத்ததை போல பல மாஸ் திரைப்படங்களில் நடித்து  சினியுலகையே மிரட்டி வருகிறார் நடிகை திரிஷா. இவருக்கு ஏற்கனவே ஒருமுறை நிச்சயம் வரை சென்று இவர் கல்யாணம் நின்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்போது இவர் சிங்கிள் நாயகியாகத் தான் இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi