தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் பயணிக்க தொடங்கியுள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதனால் இந்த திரைப்படம் தான் விஜயின் சினிமா கேரியரில் கடைசி திரைப்படம் ஆகும். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனிடையே விஜய் என்றால் உதறி தள்ளும் ஆட்கள் யாருமே கிடையாது.
ஆனால் பிரபல பாடகர் ஒருவர் விஜய் பலமுறை போன் செய்தும் எடுக்காமல் இருந்துள்ளார். அது குறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை பிரபல பாடகர் கிரிஷ் தான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் பலருடைய குரல்களிலும் மிமிக்ரி பேசுவேன். ஒருமுறை எனக்கு விஜய் சார் நிறைய டைம் போன் பண்ணாரு. ஏதோ ஒரு காரணத்தால என்னால எடுக்கவே முடியல. உடனே என்னுடைய மனைவி சங்கீதாவுக்கு போன் பண்ண அவரு எங்க அவன் போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான் போன கொஞ்சம் கொடு என்று சொல்லி கேட்டாரு. உடனே நான் போன் பேசுனதும் ஏன்டா எவ்வளவு நேரம் ஆகும் போன் பண்ணிக்கிட்டு இருக்கேன் போனை பார்ப்பியா பார்க்க மாட்டியா. நான் போன் பண்ணி எடுக்காத ஒரே ஆள் நீ தாண்டா என்று என்கிட்ட பேசினாரு என கிரிஷ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…