தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதுதான் மரபு. ஆனால், முதல்வர் பதவியேற்பு மற்றும் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகளிலும், அந்த மரபை மீறி ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடைமுறை மாற்றத்திற்குத் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தவெக கூட்டணியில் உள்ள சிபிஐஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்துவிட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பதவியேற்ற முதல் நாளிலேயே முதல்வர் விஜய் இத்தகைய ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…