CINEMA
உண்மையில் வனிதாவை அடித்தது யார்..? போலீஸ் Complaint கொடுக்காதது ஏன்..? வனிதா தாக்கப்பட்ட விவகாரத்தில் பயில்வான் சொல்லும் அதிர்ச்சி தகவல்..
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமாரின் முத்து மாகாளான ஜோவிகா விஜயகுமார். நடிகை வனிதா தனது மகளுக்கு ஆதரவாக தனது இணையதள பக்கங்களிலும் ,பேட்டிகளிலும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருகிறார் .
அதோடு மட்டுமின்றி இவர் பல சேனல்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனமும் செய்து வருகிறார். அப்படி நள்ளிரவில் பிக் பாஸ் பேட்டியை முடித்துவிட்டு வரும்பொழுது தன் மீது மர்மநபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக புகைப்படத்துடன் பக்கத்தில் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை வனிதா.
மேலும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு, தனது காரை எடுக்க சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ‘ரெட் கார்டு கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாகவும், அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதிப் ஆண்டனியின் ஆதரவாளர் தான்’ என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் வனிதா தாக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘ யாராவது ஒருவர் நம்மை அடித்தாலோ, அல்லது காரில் செல்லும் பொது இடித்து விட்டாலோ உடனே போலீசிடம் complaint கொடுப்போம் தானே.. வனிதா ஏன் போலீஸ் complaint கொடுக்கவில்லை. மேலும் அவர் கூறுவது உண்மைதானா..?’ என்ற கோணத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ…