CINEMA
“திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்”.. விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சி கொடுத்த திரௌபதி பட நடிகை.. இவர் தான் கணவரா..?
நடிகை ஷீலா ராஜ்குமார், “அழகிய தமிழ் மகள்” என்ற சீரியலில் மூலமாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார் இவர். செரியாலில்ருந்து சினிமாவிற்கு சென்ற இவர், தமிழில் To Let மற்றும் புகழ்பெற்ற திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். நடிகர் ரிச்சர்ட், அஜித் அவர்களின் மச்சான் ஹீரோவாக நடித்த திரௌபதி படத்தில் லீட் ரோலில் நடித்தார் நடிகை ஷீலா. இந்த படம் இவரை மக்களிடத்தில் பிரபலமாகியது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த ‘மண்டேலா’ திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார், இந்த திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை, ஜோதி, பிச்சைக்காரன் 2 , உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷீலா.
நடிகை ஷீலா ராஜ்குமார் கடந்த 2016 -ஆம் ஆண்டு தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் இவர்களது திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த புகைப்படங்களும் அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று நடிகை ஷீலா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “திருமண உறவிலிருந்து விலகுகிக்கிறேன், உங்கள் அன்பும் நன்றியும்” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram