நடிகர் ராம்சரண், sj சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன் படக் குழுவினர் அதிகமாக ஈடுபட்ட நிலையில் இயக்குனர் ஷங்கரும் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் அடுத்தடுத்த பிரமோஷன் ஈடுபட்டார். அந்த பேட்டியில் தன்னுடைய முந்தைய படத்தின் அனுபவங்கள், கேம் சேஞ்சர் படத்தின் எக்ஸ்பீரியன்ஸ் ஆகியவற்றை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக அர்ஜுன் லீட் கேரக்டரில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ஜென்டில்மேன் படம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதாவது இந்த படத்தில் நடிக்க தான் முதலில் சரத்குமாரை தான் தேர்வு செய்ததாகவும் அவருடைய டேட்ஸ் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்ததால் அவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார் ஷங்கர்.
ஆனால் அவர்கள் தாங்கள் கமலஹாசனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாகவும் அவரை வைத்து இந்த கதைக்களத்தில் படத்தை இயக்க கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் தான் கமலஹாசனிடம் கதை சொன்னதாகவும் சங்கர் கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க கமலஹாசன் மறுத்துவிட்டாராம்.
அந்த நேரத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இதே போன்ற வேடத்தில் கமலஹாசன் நடித்திருந்ததால் இந்த கேரக்டர் ரிப்பீட் செய்யும் விதமாக இருக்கும் என்ற இந்த படத்தில் கமலஹாசன் நடிக்க மறுத்தாராம். இதனை தொடர்ந்து தான் நடிகர் அர்ஜுனை இந்த கேரக்டரில் நடிக்க வைத்து ஜென்டில்மேன் படத்தை எடுத்ததாகவும் சங்கர் கூறியுள்ளார்
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…