Connect with us

CINEMA

“ரஜினி என் வீட்டுக்கே வந்து கேட்டாலும் அவருக்கு நான் படம் பண்ண மாட்டேன்.. “ வைரமுத்துவிடம் சொன்ன ஷங்கர்!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரஜினி எப்படி நடிகர்களில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறாரோ அதுபோலவே இயக்குனர்களில் சூப்பர் ஸ்டாராக ஷங்கர் இருந்து வருகிறார். 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் அதன் பின்னர் இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி என பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

   

இதில் முதல்வன் படத்தை அவர் ரஜினிக்காகதான் எழுதியிருந்தார். ஆனால் அப்போதிருந்த அரசியல் காரணங்களால் அந்த படத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். இதனால் ஷங்கருக்கு ரஜினி மேல் வருத்தம் இருந்துள்ளது. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு ரஜினி ஷங்கர் இணைந்து ஏவிஎம் நிறுவனத்துக்காக சிவாஜி படத்தின் மூலம் இணைந்தனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் பட அனுபவங்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “ ரஜினியுடன் நான் படம் பண்ண வேண்டும் என பேசிய போது அவர் பெரிதாக பண்ண வேண்டும் என்றார். பெரிதாக பண்ண வேண்டும் என்றால் ஷங்கர்தான் இயக்க வேண்டும் எனக் கூறினேன்.

அவர் எனக்கு பண்ணமாட்டார் என்றார் ரஜினி சார். ஏன் என்றேன். அவர் ஒருமுறை வைரமுத்துவிடம் “ரஜினி சார் என் வீடு தேடி வந்து படம் இயக்க சொன்னாலும் நான் இயக்க மாட்டேன்” எனக் கூறினாராம் எனக் கூறியுள்ளார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் அவரிடம் ஒரு தயாரிப்பாளராக பேசுகிறேன் எனக் கூறினேன்.

அதன் பின்னர் ஷங்கரிடம் பேசினோம். அவரும் ரஜினி சார் என்னோடு சேர்ந்து பண்ணுவாரா என்று கேட்டார். அதன் பின்னர் இருவரையும் சந்திக்க வைத்து படத்தை தொடங்கினோம்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top