சென்னை வண்டலூர் அருகே செயல்படக்கூடிய காப்பகம் ஒன்றில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் உணவு ஆகியவை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளர் அருள் தாஸ். இப்படியான நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள 18 சிறுமிகளுக்கு உரிமையாளர் அருள் தாசின் ஓட்டுனர் பழனி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சிறுமிகள் மாவட்ட சிறுமிகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் அலுவலர் வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரியின் அடிப்படையில் காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கூடுதலாக 18 குழந்தைகளிடம் குழந்தைகள் நல அலுவலரும் விசாரணை நடத்தி வருகின்றார். தாய் தந்தையை இழந்து காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…
ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விசிக முகாம் செயலாளர் இளையராஜா (39), கடந்த ஆகஸ்ட்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…