கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார். தனது குடும்பத்தினர் யாரும் தன்னைக் கவனிக்காததால் பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பதாகக் கூறிவந்த இவர், இறக்கும் வரை எளிய வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு, இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஊர்மக்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் மூலைகளில் சாக்குமூட்டைகளில் ரொக்கப் பணமும் நாணயங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றை எண்ணிப் பார்த்தபோது சுமார் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்தது தெரியவந்தது.
இந்தத் தொகையை அவர் பிச்சை எடுத்துச் சேர்த்த பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கச் சிலர் யோசனை தெரிவித்தனர். ஆனால், பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தை ஏற்க முடியாது எனக் கூறி பள்ளிவாசல் நிர்வாகம் அதனைப் பெற மறுத்துவிட்டது. இறுதியில், மூதாட்டியின் சகோதரர் தனது குடும்பத்தினருடன் வந்து அந்தப் பண முழுவதையும் எடுத்துச் சென்றார்.
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…
ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…