Connect with us

CINEMA

பெற்றோருக்கு 60 ஆவது திருமணம் செய்து அழகு பார்த்த சீரியல் நடிகை வைஷாலி தனிகா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் அந்த விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு  என்று  மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு உள்ளது. அந்த வகை விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும்  சீரியல் ‘முத்தழகு’.

   

இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவர்த்தி,  ஷோபனா,  சரத்,  ஆனந்த் பாபு , வைஷாலி தனிகாபோன்ற பல பிரபலங்கள் இந்த சீரியல் நிலைத்துள்ளனர்  இந்த சீரியலில் அஞ்சலி என்ற  கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை வைஷாலி தனிகா.

இவர் சென்னையை சேர்ந்தவர்.இவர் முதன் முதலாக மாலை நேரம் என்ற குறும்படம் மூலமாக அறிமுகமானார். அதை  தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் கார்த்திக் தங்கச்சியாக நடித்த பிரபலமானார்.

அதன் பிறகு வெள்ளித்திரை நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீம ராஜா, கதக்களி போன்ற படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக சில காலங்கள் நடித்திருந்தார்.

அதன் பின்னர் அந்த சீரியலை விட்டு விலகி ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்தார். இவர் மாப்பிள்ளை, ராஜா ராணி, நம்ம வீட்டு பொண்ணு, மகராசி, கோகுலத்தில் சீதை போன்ற பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

நடிகை வைஷாலி தனிகா தனது நீண்ட நாள் காதலரான சத்யா என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.பிறகு இருவரும் பிட்னஸ் ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தனர்.

தனது பெற்றோருக்கு  60ஆவது கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார். தற்பொழுது அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top