‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் மகளை பார்த்திருக்கீங்களா..!!! சில புகைப்படங்கள் இதோ…!!!!

By Begam

Published on:

நடிகர்  ஸ்ரீகுமார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் மகன் ஆவார் . விஜய் டிவியில்  ஒளிபரப்பான ‘காவியாஞ்சலி’ நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானர் . இதைத்  தொடர்ந்து இவர் ஆனந்தம், மலர்கள், சிவசக்தி, யாரடி நீ மோகினி  என்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் .

   

 

சின்னா  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகம் ஆனார் . இந்த  படத்தை தொடர்ந்து  தெறி, பம்பரக்கண்ணாலே, ரங்கூன் , ஆர்கே நகர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார் .

சன் டிவியில்  ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சமிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளை உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்  ஸ்ரீகுமார் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் .

தற்பொழுது அவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை முதன் முதலாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாங்களா ? என்று கேட்டு வருகின்றனர்.