Categories: சினிமா

பார்த்திபனிடமிருந்து சீதாவை நான் பிரித்தேனா..? எங்களுக்குள்ள அப்படிப்பட்ட உறவு இருந்துச்சு.. ஓப்பனாக பேசிய சீதாவின் 2-வது கணவர்..!!

Spread the love

பிரபல நடிகரான பார்த்திபன் புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது அவருக்கும் நடிகை சீதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சீதா பார்த்திபனை விட்டு பிரிந்து விட்டார். கடந்த 2010-ஆம் ஆண்டு தனது 43 வயதில் சின்னத்திரை நடிகரான சதீஷை சீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது சந்தோஷமாக இருக்கிறது எனவும் சீதா ஒரு முறை கூறியதாக இணையத்தில் செய்திகள் வந்தது. அதன்பிறகு ஒரு சில ஆண்டுகளில் இரண்டாவது கணவர் சதீஷையும் சீதா பிரிந்துவிட்டார். இந்த நிலையில் சதீஷ் தெலுங்கு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் சீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். பார்த்திபனிடமிருந்து நான் தான் சீதாவை பிரித்தேன் என ஊடகங்களில் செய்திகள் உலா வருகிறது. சொல்லப்போனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

 

அதுதான் உண்மை. நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என்று சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரையிலும் எங்களுடன் நடித்த நடிகர்களுக்கு அது தெரியும். சீதாவுடன் நான் நடித்துக் கொண்டிருந்த போதே பார்த்திபனுக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. சீதாவால்தான் என் மனைவி பிரிந்து சென்றதாக கூறுகின்றனர். அப்படி எல்லாம் கிடையாது. எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். என் மனைவி இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

என்னைவிட அவர்களை என் மனைவி நன்றாக பார்த்துக் கொள்வார். அந்த நம்பிக்கை தான் நான் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. சீதாவை பொருளாதார ரீதியாக ஏமாற்றி விட்டேன் என்றெல்லாம் சொல்வது ஆதாரம் இல்லாமல் பேசும் செயல். அந்த செய்தியை பரபரப்பாக்க என்பதற்காக அப்படி எழுதுகிறார்கள். நானும் சீதாவும் நல்ல நண்பர்கள் மட்டும்தான். என் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சீதா வருவார். அதே போல நாங்கள் நல்ல நட்புடன் தான் இருக்கிறோம் என சதீஷ் கூறியுள்ளார்.

admin

Recent Posts

அதிர்ச்சி..! கோவில் திருவிழாவிற்கு வரி கொடுக்க மறுத்ததால்.. தலித் குடும்பம் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.. நாட்டையே அதிரவைத்த வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கோயில் திருவிழாவிற்கு வரி (சந்தா) வழங்க மறுத்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத்…

1 minute ago

விஜய்க்கு பதில் இவரா..? திருச்சி கிழக்கில் களம் காணும் நேர்மை நாயகன்.. தவெக-வின் மாஸ்டர் பிளான்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்,…

4 minutes ago

“”யாரும் சொல்லாத சீக்ரெட்… உங்க கூலர்ல ஐஸ் மாதிரி காத்து வரணுமா?… கூலரை இப்படி கிளீன் பண்ணுங்க… நிமிடத்தில் சரி செய்ய சூப்பர் ஐடியா”…!!!

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலரை முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஏசிக்கு இணையான குளிர்ச்சியைப் பெற…

4 minutes ago

“உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டியா? பயப்பட வேண்டாம்.. வீட்டிலேயே கரைக்க இந்த ஒரு மேஜிக் ஜூஸ் போதும்… பல வருட கொழுப்பு கட்டியையும் விரட்டிவிடலாம்”…!!!

உடலில் தோல் மற்றும் தசை அடுக்கிற்கு இடையில் உருவாகும் கொழுப்பு கட்டிகள் 'லிப்போமா' என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஆரம்பத்தில்…

5 minutes ago

பஞ்சாப் சிங்கம் இனி ‘சிங்கிள்’ இல்லையா..? காதலியுடன் ஜாலியாகப் பயணிக்கும் அர்ஷ்தீப் சிங்… வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை சமரின் கவுர்  ஆகியோர் பஞ்சாப்…

6 minutes ago

“நல்ல மனசுக்காரன்யா நீ” ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே இப்படியா..? “மக்கள் பிரச்சினையோடு வந்தால்” MLA-க்களுக்கு விஜய் போட்ட முதல் உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்ற தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல் உத்தரவை…

8 minutes ago