“திடீர் திருப்பம்”…. கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு…. அண்ணன் – தம்பி போட்ட ரகசிய ப்ளான்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் அவர்கள் வரவில்லை.

இதற்கிடையே, அசோக்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் வரவிருப்பதால், அந்த வழக்கின் தீர்ப்பு அல்லது போக்கை பொறுத்தே அவர்கள் இருவரும் விசாரணையை எதிர்கொள்ளக் கூடும் என அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.