“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், “மத்திய அமைச்சரவையில் நீங்களே தாராளமாகச் சேரலாம்” என்று விசிக எம்பி ரவிக்குமார் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அந்த விருப்பத்தை தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்குப் பதவி கிடைப்பதை விட, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காகக் களத்தில் நின்று உழைத்த வன்னி அரசு போன்ற தகுதியானவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்றே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது பெருந்தன்மையான முடிவையும் வெளிப்படுத்தியுள்ளார். விசிகவிற்குள் அதிகாரப் பகிர்வு மற்றும் தலித் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், திருமாவளவனின் இந்த வெளிப்படையான கருத்து தமிழக அரசியலில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.